Monday, December 22, 2008

தொலைவுகளில் தொலைந்து போதல்_பற்றிய கதையாடல்

தொலைவுகளில் தொலைந்து போதல்_பற்றிய கதையாடல்


தொலைவுகளில் தொலைந்து போகிறேன்.
Tuesday, November 18, 2008 at 9:06am

தொலைவுகளில் தொலைந்து போகிறேன்.
தொலைவுகளில் தொலைவதற்காகத் தொலைந்துபோகிறேன்.
தொலைவுகளில் தொலைவுக்கான தொலைவுப்பரிமாணங்களும் தொலைந்துபோகின்றன.
தொலைதல் ஒரு ஜனனம்.
தொலைதல் ஒரு மரனம்.
தொலைதலில் இருமைகளும் தொலைந்து போகின்றன.
“தொலைந்து போ” அல்லது “சும்மா இரு”
தொலைதல் என்பது தொலைவுகளில் தொலைந்துபோவதா? இல்லை,
தொலைவுகளில் கரைந்துபோவதா?
கரையம், கரைப்பான்,கரைதல்,கரைசல்.
தொலையம்,தொலைப்பான்,தொலைதல்,தொலைசல்.
தொலைவுகளில் தொலைந்து போகிறேன்

Anandavel Gobiraj
(London) wroteat 6:08pm on November 18th, 2008

nee oru great da machan........i am really impressed which u wrote down


Sentha Selvaratnam
wrote at 7:32pm on November 18th, 2008

தொலை தூர தெரு விளக்கு
தொலைந்துபோகும்,
தொலை நோக்கி இன்னும் பயணித்தால்!
தொலைந்தது உன் சட்டத்தில்..
ஆனால்தொலை தூர தெரு விளக்கு
தொலைந்துவிடாது!!
தொலைதலும் தோன்றலும்
இயற்கையின் வட்டத்தில்..
தொலைவதேல்லாம் உன்னுடையது அல்ல
தொலைத்ததெல்லாம் உன் தப்பல்ல..
தொலைதல்.. இயற்கையினால்
தொலைக்கப்பட்ட விதி!!!



Gunaratnam Sentheepan
wrote at 9:05pm on November 18th, 2008

செந்தா தொலைவிற்கான உன் பரிமாணம் உன் பார்வைகளின் ஊடாக விரிந்த தளம் மிக உயிர்ப்பாக இருக்கிறது.
ஆனால் உன் தொலைதலில் இயற்கை தொக்கி நிற்பதால், உன் சுயம் மறைந்து போகிறது. ஏனேனில் என் தொலைதல் என் சுயம். உன் தொலைதல் உன் சுயம்.
ஆனந்தவேல் கோபிராஜ், என் தொலைவுகளின் ஊடாக நீயும் தொலைந்திருந்தால், அதே தளங்களின் நீயும் விரிந்திருந்தால் இது இப்படைப்பின் வெற்றியன்றி எனது வெற்றியல்ல நண்பா!இது எனக்கூடாக பிரசவிக்கப்பட்டது மட்டுமே.
இது ஒவ்வொரு வாசகனுக்கும் அவன்சார் தளங்களுக்கேற்ப விரிவதுதான் இதன் சுயம்- சுகந்தம்-பூரணம்



Pranavan Ramachandran
(Australia) wrote at 9:54am on November 21st, 2008
தொலைந்தது எதுவோ
தொலைத்தவர் எவ்வழியோ
வாழ்க்கையை தொலைக்க
முயன்றுதொலைந்த நிழல்தோற்றம்
உன் மெய்தொலைய
உண்மைதொடக்கம்
நீதொலைந்த தோற்றம்
தேடிதோல்வி, அல்ல......தொடர்ச்சி



Gunaratnam Sentheepan
wrote at 5:05pm on November 21st, 2008

தொலைதல்............................தொலைவுகளின் வெளியில் தொலைவதல்ல. தொலைவுகளின் வெளியும் தொலைதல் தான் தொலைதலின் பூரணம்.
உன் வரிகளின்// ...தொடர்ச்சிமிக அற்புதம் தொலைவுகளுக்கு ஆதி அந்தம் இல்லை என்பது அதில் சூத்திரமாகிறது........... சூட்சமாகிறது....................

1 comment:

செந்தீபன் said...

தொலைதல் பற்றிய உங்கள் கதையாடல் வெளியாய் விரியட்டும்.